Friday, May 30, 2014

அரசுப் பணியாளர்களின் நோக்கமும் செயல்பாடுகளும்

அரசுப் பணியாளர்களின் நோக்கமும் செயல்பாடுகளும் பற்றிய ஒரு ஆய்வினை துவக்க வேண்டும் போல இருக்கிறது.

அரசுப் பணியாளர் என்ற பெருமையை பெற உழைத்த கரங்கள் இன்று லஞ்சத்தை நோக்கி பயணிக்கின்றன என்பது ஒரு வெட்கக் கேடு,

நேர்மை என்ற உயரிய நோக்கம் பெரும்பாலான பணியாளர்களிடம் இல்லை என்பதை நன்கு உணர முடிகிறது.

முதலில் அரசு வேலைக்கு முந்துதல்... பின்னர் லஞ்சம் கிடைக்கும் பணிக்கு முந்துதல்...........பின்னர் லஞ்சத்திற்கு முந்துதல்...........பின்னர் இதில் முதலிடம் பிடிக்க முந்துதல்............இந்தப் போட்டியில் மட்டுமே பணியாளர்கள்  சென்று கொண்டு இருப்பது வேதனை.