Saturday, January 14, 2012

பொங்கல் நாளில் ஒரு

எனக்கு இந்த பொங்கல் நாளில் ஒரு எண்ணம். சூரியனுக்கு ஒரு நன்றி விழா அல்லவா இது . அவன் ஒவ்வோர் நாளும் கண் சிமிட்டுவதால் தான் நாம் உறங்கி எழுகிறோம் . அவனன்றி உயிர்ப்பு இல்லை . அவனை நினைக்க துதிக்க ஒரு விழா இது.  அவனது உயிர்ப்பால் உயிர்பெறும் ஜீவ ராசிகள் அனைத்தும் நமது இதய கதவுகளை திறக்கின்றன. அனைத்து உயிர்களிடத்தும் நாம் செலுத்தும் அன்பு தான் அவனை துதிப்பது.