Saturday, January 21, 2012

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை 
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை 
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே  (திருமூலர்)

              இது திருமூலர் வாக்கியம்  அதாவது அனைவராலும் எளிதாக செய்யகூடிய சாமான்னிய தர்மம் எவை என தெரிவிக்கிறார்.  அது மட்டுமன்று.  இவற்றை மட்டுமே பின்பற்றி மனஅமைதி பெறலாம். இறைவனை வணங்குவதும் அனைத்து உயிர்களை நேசிப்பதும் உண்ணும் உணவை தர்ம சிந்தனையோடு பகிர்ந்து கொள்வதும் நமது கடமை.  பிறரை பார்க்கும் போதும் பேசும் போதும் இனிய சொற்களை பேசலாம். இனிய சொற்களை  பேசுவது  மனதை தூய்மையாக்கும் .
இத்தகைய சாமான்ய தர்மங்களை கடைபிடிப்போம்  மன சாந்தியுடன் வாழ்வோம் .